இளநிலை, முதுநிலை
மற்றும் ஆராய்ச்சி படிப்புகளின் சேர்க்கைக்காக கியூட் தேர்வு விண்ணப்பிக்கும் முறை
மத்திய
பல்கலைகளில் இளநிலை, முதுநிலை
மற்றும் ஆராய்ச்சி படிப்புகளின் சேர்க்கைக்காக, ‘கியூட்‘
எனப்படும் பொது நுழைவுத்
தேர்வை, தேசிய தேர்வு
முகமை சமீபத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு நடக்க
இருக்கும் ‘கியூட்‘ தேர்வுக்கான விண்ணப்பிக்கும் விபரங்கள்
நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘கியூட்‘
நுழைவுத் தேர்வுக்கு, ஏப்.,
2ம் தேதி முதல்,
‘ஆன்லைன்‘ வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நடைமுறைகள் ஏப்., 30ம் தேதியுடன்
முடிவடையும்.
மாநிலங்களில் உள்ள அரசு, தனியார்,
நிகர்நிலை பல்கலைகளும், தாங்கள்
விரும்பினால் ‘கியூட்‘
தேர்வு வாயிலாக மாணவர்
சேர்கை நடத்தலாம் என,
பல்கலை மானிய குழு
நேற்று தெரிவித்துள்ளது.