தென்னை சாகுபடி குறித்த சான்றிதழ்
படிப்பு – விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம், பனமரத்துப்பட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண்
அறிவியல் நிலையத்தில் தென்னை
சாகுபடி தொழில்நுட்பம் குறித்த,
திறந்தவெளி, தொலைதுாரக் கற்றல்
சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட உள்ளது.
அதற்கு,
10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; படிப்பு காலம்,
6 மாதம். தமிழில் கற்பிக்கப்படும். கட்டணம், 2,560 ரூபாய். சந்தியூர்
வேளாண் அறிவியல் நிலையத்தில், மாதத்தில் ஒரு சனிக்கிழமை காலை, 9.30 முதல் மாலை,
5.00 வரை, விஞ்ஞானிகள் பாடம்
நடத்துவர்.
அதில்
தென்னை நடவு, வகை,
கலப்பினம், நடவு முறை,
நீர்பாசன மேலாண்மை, களை
மேலாண்மை, உரங்கள் பயன்பாடு,
பூச்சி நோய் கட்டுப்பாடு அறுவடை முறை, மதிப்பு
கூட்டல் குறித்து கற்பிக்கப்படும்.
தமிழ்நாடு
வேளாண் பல்கலை சான்றிதழ்
வழங்கப்படும். இதை
விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விபரம்
பெற, திட்ட ஒருங்கிணைப்பாளரை, 97877 13448 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


