Tuesday, August 5, 2025

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி

புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை உருவாக்க முடியும். முன்னதாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் அல்லது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வசதி இல்லை. 2018ஆம் ஆண்டில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. பால்ய ஆதார் அட்டை (Bhal Adhaar Card) என்றும் அழைக்கப்படும் நீல நிற ஆதார் அட்டை, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பால்ய ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இருப்பினும், பெற்றோர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதனை நீட்டிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், குழந்தைக்கு ஐந்து வயது ஆன பிறகும் பால்ய ஆதார் அட்டையை சரியான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளின் ஆதார் விவரங்களுக்குத் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

குழந்தைகளுக்கான இந்த ஆதார் அட்டைகள் நீல நிறத்தில் உள்ளன. மேலும் அவை பால்யஆதார் அட்டைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. குழந்தையின் ஆதாருக்கு பயோமெட்ரிக் தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆதாருக்காக குழந்தையின் புகைப்படம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற பெற்றோரில் ஒருவரின் ஆதாரை வழங்குவது கட்டாயமாகும். பெற்றோர் இருவருக்கும் ஆதார் இல்லை என்றால், அவர்கள் முதலில் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?

பயனர்கள் நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அருகிலுள்ள ஆதார் மையத்தை அவர்கள் சரிபார்க்கலாம். இதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியலையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஆதார் அட்டைப் பதிவுச் செயல்முறையைத் தொடர்வதற்கு முன், தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது.

1. அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும் (அருகில் உள்ள பதிவு மையம் குறித்த விபரங்களை ஆன்லைனில் காணலாம்)

2. ஆதார் பதிவு படிவத்தில் உங்கள் ஆதார் எண்ணை எழுதி நிரப்பவும்.

3. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சேர்க்க, பெற்றோரில் ஒருவர் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.

4. முகவரி மற்றும் பிற விவரங்கள் பெற்றோரின் ஆதாரில் இருந்து நிரப்பப்படும்.

5. குழந்தையின் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்கவும்.

6. ஆதார் நிர்வாகி பதிவு எண் அடங்கிய ஒப்புகை சீட்டை ஒப்படைப்பார். பதிவு எண்ணைப் பயன்படுத்தி ஆதார் நிலையைச் சரிபார்க்கலாம்.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

Related Articles

Popular Categories