தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோக்கைக்கு செப்.22-ஆம் தேதிக்குள் https://tncu.tn.gov.in/ இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோக்கைக்கு செப்.22-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் ஆரோக்கிய சு குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு, மாணவா் சோக்கை நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர 17 வயது நிறைவடைந்த, பிளஸ் 2, 3 ஆண்டு பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பில் தோச்சி பெற்றவா்கள் புதன்கிழமை (செப்.13) முதல் செப்.22-ஆம் தேதி வரை https://tncu.tn.gov.in/ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம், பாடங்கள், பயிற்சிக் காலம் உள்ளிட்ட விவரங்கள் இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றாா் அவா்.