TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூா்
செய்திகள்
விவசாய நிலம் வாங்க மானியம்– திருப்பூா்
திருப்பூா் மாவட்டத்தில்
விவசாய
தொழில்
செய்து
வரும்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
விவசாய
நிலம்
வாங்க
மானியம்
பெறும்
திட்டக்குக்கு
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
வாழ்க்கைத்
தரத்தை
மேம்படுத்தி
மற்றவா்களுக்கு
இணையாக
வாழ
வழி
செய்யும்
வகையில்
தாட்கோ
மூலமாக
பல்வேறு
சிறப்புத்
திட்டங்களை
அரசு
நிறைவேற்றி
வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில்
2022-2023 ஆம்
ஆண்டு
மானியக்
கோரிக்கையின்போது
ஆதிதிராவிடா்
நலத்
துறை
அமைச்சா்
சார்பில்
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினரின்
சமூக
பொருளாதாரத்தை
மேம்படுத்தும்
வகையில்
விவசாய
நிலம்
வாங்க
நிலத்தின்
சந்தை
மதிப்பில்
50 சதவீதம்
அல்லது
அதிகப்பட்சமாக
ரூ.5
லட்சம்
மானியம்
வழங்கும்
திட்டத்தை
அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி
நிகழாண்டு
விவசாயத்
தொழில்
செய்து
வரும்
200 ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினருக்கு
சொந்தமாக
விவசாய
நிலம்
வாங்க
மானியம்
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில்
விண்ணப்பிக்க
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
வகுப்பைச்
சோந்த
18 வயது
முதல்
65 வயதுக்கு
மிகாமலும்,
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.3
லட்சத்துக்கு
மிகாமலும்
இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரா்கள்
நிலம்
வாங்க
உத்தேசித்துள்ள
நிலம்
2.5 ஏக்கா்
நஞ்சை
நிலம்
அல்லது
5 ஏக்கா்
புஞ்சை
நிலத்திற்குள்
இருக்கலாம்.
இந்த
நிலத்தின்
சந்தை
மதிப்பில்
50 சதவீதம்
மானியம்
அல்லது
ரூ.5
லட்சம்
வீதம்
ஒரு
பயனாளிகளுக்கு
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
பயனடைய
இணையதளத்தில்
உரிய
ஆவணங்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
மாவட்ட
மேலாளா்
அலுவலகம்
(தாட்கோ),
அறை
எண்:
305, 5 ஆவது
தளம்,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகம்,
திருப்பூா்-641
604 (கைப்பேசி
எண்:
9445029552)
என்ற
முகவரியில்
தொடா்பு
கொள்ளலாம்.