HomeBlogமத்திய பட்ஜெட் 2023 - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை - முக்கிய அம்சங்கள்
- Advertisment -

மத்திய பட்ஜெட் 2023 – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை – முக்கிய அம்சங்கள்

Union Budget 2023 - Finance Minister Nirmala Sitharaman's Speech - Highlights

TAMIL MIXER
EDUCATION.
ன்
பட்ஜெட் 2023 செய்திகள்

மத்திய பட்ஜெட்
2023 –
நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் உரைமுக்கிய
அம்சங்கள்

  • இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது,
    ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி
    பயணிக்கிறது.
  • கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி
    பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
  • உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு 2
    லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • நாட்டின் அடுத்த
    100
    ஆண்டுகளுக்கான புளூ
    பிரிண்ட்டாக இந்த பட்ஜெட்
    இருக்கும்.
  • 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில்
    10
    ம் இடத்தில் இருந்து
    5
    ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக
    உள்ளது.
  • உலகளாவிய சவால்கள்
    இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை
    இந்தியா ஏற்றது, உலக
    பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு
    தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
  • 2014 முதல் அரசின்
    முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது.
  • தனிநபர் வருமானம்
    2
    மடங்காக அதிகரித்து 1.97
    லட்சமாக உயர்ந்துள்ளது.
  • 102 கோடி பேருக்கு
    220
    கோடி கொரோனா டோஸ்
    தடுப்பூசி போட்டுள்ளோம்.
  • 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக
    இந்தியா உருவெடுத்துள்ளது.
  • நாட்டின் பொருளாதார
    வளர்ச்சி விகிதம் 7% ஆக
    இருக்கும் என கணிப்பு.
  • 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக
    உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • 2023-ம் ஆண்டு
    மேலும் ஓராண்டுக்கு இலவசமாக
    உணவு தானியம் வழங்கப்படும்.
  • சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம்
    வகிக்கிறது.
  • 9.6 கோடி சமையல்
    எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா
    திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர்,
    லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு
    புதிய திட்டங்கள் அறிமுகம்
  • 47.8 கோடி ஜன்தன்
    வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி
    பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புறங்களில் வேளாண்
    ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க
    ஊக்குவிப்பு.
  • மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி.
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச
    சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • கால்நடை வளர்ப்பு,
    மீன் வளத்துறைக்கு ரூ20
    லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • தோட்டக்கலை துறைக்கு
    2,200 கோடி நிதி
    ஒதுக்கீடு.
  • தேசிய ஊரக
    வாழ்வாதார இயக்கம் மூலம்
    1
    லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து
    பெரும் வெற்றி கண்டுள்ளோம்.
  • விவசாயத்துறையில் புதிய
    ஸ்டார்ட் அப்கள் உருவாக்க
    ஊக்குவிக்கப்படும்.
  • வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய்
    விவசாய கடன் வழங்க
    இலக்கு.
  • குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள்
    அமைக்கப்படும்.
  • 157 புதிய நர்சிங்
    கல்லூரிகள் உருவாக்கப்படும்.
  • பசுமை எரிசக்தி
    உற்பத்திக்கு தொடர்ந்து
    முன்னுரிமை.
  • ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்.
  • 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்.
  • பிரதமர் வீட்டு
    வசதி திட்டத்துக்கு ரூ70,000
    கோடி ஒதுக்கீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -