TAMIL MIXER
EDUCATION.ன்
பட்ஜெட் 2023 செய்திகள்
மத்திய பட்ஜெட்
2023 – நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் உரை – முக்கிய
அம்சங்கள்
- இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது,
ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி
பயணிக்கிறது. - கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி
பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. - உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2
லட்சம் கோடி ஒதுக்கீடு. - நாட்டின் அடுத்த
100 ஆண்டுகளுக்கான புளூ
பிரிண்ட்டாக இந்த பட்ஜெட்
இருக்கும். - 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில்
10ம் இடத்தில் இருந்து
5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக
உள்ளது. - உலகளாவிய சவால்கள்
இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை
இந்தியா ஏற்றது, உலக
பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு
தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. - 2014 முதல் அரசின்
முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது. - தனிநபர் வருமானம்
2 மடங்காக அதிகரித்து ₹1.97
லட்சமாக உயர்ந்துள்ளது. - 102 கோடி பேருக்கு
220 கோடி கொரோனா டோஸ்
தடுப்பூசி போட்டுள்ளோம். - 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக
இந்தியா உருவெடுத்துள்ளது. - நாட்டின் பொருளாதார
வளர்ச்சி விகிதம் 7% ஆக
இருக்கும் என கணிப்பு. - 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக
உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. - 2023-ம் ஆண்டு
மேலும் ஓராண்டுக்கு இலவசமாக
உணவு தானியம் வழங்கப்படும். - சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம்
வகிக்கிறது. - 9.6 கோடி சமையல்
எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா
திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. - ஜம்மு & காஷ்மீர்,
லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு
புதிய திட்டங்கள் அறிமுகம் - 47.8 கோடி ஜன்தன்
வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. - பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி
பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. - கிராமப்புறங்களில் வேளாண்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க
ஊக்குவிப்பு. - மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி.
- உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச
சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. - கால்நடை வளர்ப்பு,
மீன் வளத்துறைக்கு ரூ20
லட்சம் கோடி ஒதுக்கீடு. - தோட்டக்கலை துறைக்கு
₹2,200 கோடி நிதி
ஒதுக்கீடு. - தேசிய ஊரக
வாழ்வாதார இயக்கம் மூலம்
1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து
பெரும் வெற்றி கண்டுள்ளோம். - விவசாயத்துறையில் புதிய
ஸ்டார்ட் அப்கள் உருவாக்க
ஊக்குவிக்கப்படும். - வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய்
விவசாய கடன் வழங்க
இலக்கு. - குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள்
அமைக்கப்படும். - 157 புதிய நர்சிங்
கல்லூரிகள் உருவாக்கப்படும். - பசுமை எரிசக்தி
உற்பத்திக்கு தொடர்ந்து
முன்னுரிமை. - ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்.
- 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்.
- பிரதமர் வீட்டு
வசதி திட்டத்துக்கு ரூ70,000
கோடி ஒதுக்கீடு.