
TNPSC குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். எழுத்துத் தோ்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்தத் தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 42 வயதும் இருக்கலாம்.
இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 37 வயதும் இருக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மேல் படித்தவா்களுக்கு (60 வயது வரை) வயது வரம்பில்லை.
தோ்வு பற்றிய முழு விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் தோ்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரா்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ள தோ்வா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை நகல்
ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், 04175–233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

