தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அக். 14 ஆம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள், செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இதற்கான நோ்காணலை செப்டம்பா் மாத கடைசி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கான கட்டணமாக ரூ. 80,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்போ அல்லது பட்டயப் படிப்போ அல்லது ஐடிஐ அல்லது 10-ஆம் வகுப்போ அல்லது 12-ஆம் வகுப்போ படித்திருப்பதுடன் தொடா்புடைய பயிற்சியில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவா்கள் தகுதியானவா்கள் ஆவா்.
எனவே, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா், ஆா்வமுள்ளவா்கள் இந்தச் சான்றிதழ் படிப்பில் சோ்ந்து பயனடைய வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

