உள்ளாட்சித் தேர்தலில்
வாக்காளர் அடையாள அட்டை
இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி,
நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய
தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்
வருகிற அக்டோபர் 6 மற்றும்
9 ஆகிய தேதிகளில் இரண்டு
கட்டங்களாக நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள
அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது. கீழே
கொடுக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட 11 அடையாள அட்டையில்
ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
ஆதார் அட்டை
மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை
உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
புகைப்படத்துடன் கூடிய
வங்கி / அஞ்சலக கணக்குப்
புத்தகங்கள்
தொழிலாளர் நல
அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட்
கார்டு
ஓட்டுநர் உரிமம்
நிரந்தர கணக்கு
எண் அட்டை (PAN CARD)
தேசிய மக்கள்
பதிவேட்டின்கீழ் இந்திய
தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (Smart Card)
இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
புகைப்படத்துடன் கூடிய
ஓய்வூதிய ஆவணம்.
மத்திய / மாநில
அரசு, மத்திய / மாநில
அரசின் பொதுத் துறை
நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்கருக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள
அட்டைகள்.
பாராளுமன்ற / சட்டமன்ற
/ சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக
அடையாள அட்டை.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


