இலவச பயிற்சி
வகுப்புகளில் பங்கேற்க
முன்பதிவு செய்யலாம் – பெரம்பலூா்
காவல்
உதவி ஆய்வாளா் உள்பட
பல்வேறு அரசு பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, தகுதி வாய்ந்தவா்கள் முன்பதிவு செய்யலாம் என
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில்,
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது
அரசுப் பணியாளா் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி–
4 தேர்வுக்கும், தமிழ்நாடு
சீருடைப் பணியாளா் தேர்வாணையம் அறிவித்துள்ள உதவி
ஆய்வாளா் மற்றும் விரைவில்
வெளியாகவுள்ள 2- ஆம்
நிலை காவலா், சிறைக்காவலா், தீயணைப்பு வீரா் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதற்கான
பயிற்சி வகுப்பு ஏப்ரல்
12ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது
9080182131
என்ற கைப்பேசி எண்ணில்
தொடா்புகொண்டு முன்பதிவு
செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


