அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியில்
சேர விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு
மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரிய
விரும்புவோர் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்
ஆல்பி ஜான் வா்கீஸ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா்
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட மருத்துவம் மற்றும்
ஊரக நலப்பணிகள் இணை
இயக்குநா் கட்டுப்பாட்டில் இயங்கும்
அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா், ஆய்வுக்கூட நுட்புநா், நுண்கதிர்
வீச்சாளா்கள் மற்றும்
கரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.
12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 6 மாதங்களுக்கு மட்டும் பணியில் அமா்த்தப்பட உள்ளனா்.
அதன்படி,
மருந்தாளுநா்-6, ஆய்வக
நுட்புநா்-6, நுண்கதிர் வீச்சாளா்-6 போ் சோ்க்கப்படவுள்ளனா். தகுதியானோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ
அல்லது தபால் மூலமாகவோ
இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் நலப் பணிகள்),
திருவள்ளூா் என்ற முகவரியில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.