மீன் வளர்ப்பு
திட்டத்தில் பயன் பெற
விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்லில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதம
மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7.50 லட்சத்தில் நீரினை மறுசுழற்சி முறையில்
சிறிய தொட்டிகள் அமைத்து
நன்னீர் வளர்ப்பு செய்ய
பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்
மானியம் ரூ.3 லட்சம்
வழங்கப்படும். ஆதிதிராவிடருக்கு 60 சதவீதம் மானியம்
ரூ.4.50 லட்சம் வழங்கப்படும்.
ஏழு
லட்சம் ரூபாயில் நுாறு
எக்டேரில் புதிய மீன்
வளர்ப்பு குளங்கள் அமைக்கும்
திட்டத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் ரூ.2.80
லட்சம், ஆதிதிராவிடருக்கு 60 சதவீதம்
மானியம் ரூ.4.20 லட்சம்
வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ‘மீன்வளம் மற்றும் மீனவர்
நல உதவி இயக்குனர்
அலுவலகம், நேருஜி நகர்,
திண்டுக்கல்-624001′ முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மூப்பு
நிலை, தகுதியின் அடிப்படையில் பயனாளி தேர்வு செய்யப்படுவர். விபரங்களுக்கு 0451-2900148 ல்
பேசலாம்.