HomeBlogசட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சட்டப்
படிப்புகளில் சேர
வரும் 4-ம் தேதி
முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

சட்டப்
பல்கலைக்கழகத்தின் கீழ்
இயங்கும் சீர்மிகு சிறப்பு
சட்டக் கல்லூரியில் பிஏ.
எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி,
பிகாம். எல்எல்பி, பிசிஏ.
எல்எல்பி ஆகிய 5 ஆண்டு
இளங்கலை ஆனர்ஸ் சட்டப்
படிப்புகளும், அதேபோல்,
அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு
சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு
கல்வி ஆண்டில் (2021-22) சேர
ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ்
2
முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (www.tndalu.ac.in) மூலமாக
ஆகஸ்ட் 4-ம் தேதி
முதல் 26-ம்தேதி வரை
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை,
கல்விக் கட்டணம் உள்ளிட்டவிவரங்களையும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

3 ஆண்டுகால
எல்எல்பி, 2ஆண்டுகால எல்எல்எம்
மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு
பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர்
வெளியிடப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular