பிப்ரவரி 23 முதல்
மார்ச்
23ம்
தேதி
வரை
குரூப்
2 தேர்விற்கு
விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் குரூப்
2 மற்றும்
குரூப்
2 A தேர்வுகளுக்கான தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. மே
21-ம்
தேதி
குரூப்-2
மற்றும்
குரூப்-2A
தேர்வுகள்
நடைபெறும்
என
டிஎன்பிஎஸ்சி தலைவர்
அறிவித்துள்ளார். பிப்.23
முதல்
மார்ச்
23 வரை
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
தேர்வு
முடிவுகள்
ஜூன்
மாதம்
வெளியிடப்படும் என
டிஎன்பிஎஸ்சி தலைவர்
தெரிவித்துள்ளார்.
இந்தப்
போட்டித் தேர்வுகள் மே
மாதம் 21 ஆம் தேதி
சனிக்கிழமை நடைபெறுகின்றன.
ஏற்கனவே
திட்டமிட்டபடி இந்த
தேர்வுகளை இரண்டு வகைகளாக
எழுதலாம்.
தமிழில் எழுத
விருப்பமுள்ளவர்கள்
- தமிழில் 100 கேள்விகளும்,
- பொது அறிவியல்
75 கேள்விகளும் - ஆப்டிடியூட் டெஸ்ட்
25 கேள்விகளும் என மொத்தம்
200 கேள்விகள் கேட்கப்படும்.
ஆங்கிலத்தில் எழுத
விரும்புபவர்களுக்கு
- பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும்
- பொது அறிவியல்
75 கேள்விகள் - ஆப்டிடியூட் டெஸ்ட்
25 கேள்விகளும் கேட்கப்படும்.
இந்தக்
கேள்விகளுக்கான மொத்த
மதிப்பெண் 300 ஆகும். இந்த
300 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் என்று
அறிவிக்கப்படும். மொத்தம்
5,417 பணியிடங்களுக்கு தேர்வு
நடைபெறவுள்ளது.
தேர்வு
முடிவுகள் ஜூன் மாதம்
வெளியிடப்படும்.