
குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் (வி.ஏ.ஓ.) பணிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சிப் பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் தோ்வு 13.7.2025 அன்று நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சி, வகுப்புகளில் அதிகளவிலான பாடவாரியான பயிற்சித் தோ்வுகள், மாநில அளவிலான பொது மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்கள் சுய விவரங்களை நிறைவு செய்தோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இந்தத் தோ்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் துறையின் இணையதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

