நாடகக் கலை
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
நாடகக்கலை
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஸ்ரீசிவக்குமார நாடகக் கலை ஆராய்ச்சிப் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சித்ரதுா்கா மாவட்டம், ஹொசதுா்கா வட்டத்தின் சானேஹள்ளி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீசிவக்குமார நாடகக்கலை
ஆராய்ச்சி பள்ளி சார்பில்
ஓராண்டுக்கான நாடகக்கலை
பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது.
2022-2023ம்
கல்வியாண்டில் இந்தப்
பள்ளியில் நாடகக்கல்வி பயிலவிரும்பும் மாணவா்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி.
தோச்சி பெற்றுள்ள 18 முதல்
28 வயதுக்கு உட்பட்டவா்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் https://www.theatreschoolsanehalli.org/english/index.php என்ற
இணையதளத்தில் இருந்துதரவிறக்கம் செய்து, பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை முதல்வா்,
ஸ்ரீசிவக்குமார நாடகக்கலை
ஆராய்ச்சி பள்ளி, சானேஹள்ளி-577
515, ஹொசதுா்கா வட்டம், சித்ரதுா்கா மாவட்டம் என்ற முகவரியில் நேரில் அல்லதுவிரைவு அஞ்சலில்
ஒப்படைக்க வேண்டும்.
இதனடிப்படையில், ஜூலை 6, 7, 8ம் தேதிகளில்
தகுதியான மாணவா்களை தோந்தெடுக்க கலந்தாய்வு நடக்கிறது. இதில்
தோந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுவதோடு, இலவசமாக தங்கும் வசதியும்
தரப்படுகிறது. ஆகஸ்ட்
முதல் பட்டயப் பயிற்சி
வகுப்புகள் தொடங்குகின்றன.
மேலும்
விவரங்களுக்கு 9448398144,
9482942394 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்.