உலக ஈரநில
தினம் – ஓவியப்போட்டியில் பங்கேற்கலாம்
ராமநாதபுரம் வனத்துறை சார்பில், பிப்.,2
உலக ஈரநில தினத்தை
முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு புகைப்படம், ஓவியபோட்டி நடக்கிறது.
இப்போட்டியில் ராமநாதபுரத்தில் காணப்படும் நீர்நிலைகள், ஈரநிலங்களில் காணப்படும் பறவைகள், இவற்றின் அழகான
புகைப்படங்கள் ஆகியவற்றை
போட்டோ எடுத்தும் அல்லது
ஓவியமாகவோ வரைந்து பிப்.,1க்குள்
வனஉயிரின காப்பாளர் அலுவலகத்திற்கு gommnp@gmail.com என்ற இணையதள
முகவரிக்கு அனுப்பலாம்.
ஒன்று
முதல் ஐந்தாம் வகுப்பு,
ஆறு முதல் எட்டாம்
வகுப்பு, ஒன்பது முதல்
பிளஸ் 2 வரை, கல்லுாரி
மாணவர்கள், தன்னார்வலர்கள் என
பிரித்து மாவட்ட அளவில்
ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த
3 புகைப்படங்கள், ஓவியங்கள்
தேர்வு செய்து பரிசு
வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும்
பங்கேற்க வேண்டும். மேலும்
விபரங்களுக்கு உதவி
வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் – 94424 07750, வனரேஞ்சர் ஜெபஸ்
– 90250 56009 ஆகிய அலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.