தமிழக அலுவலகங்களில் WORK FROM HOME
நாடு
முழுவதும் CORONA பரவலின்
தாக்கம் சற்று அதிகமாகவே
காணப்படுகிறது. இதனால்
பள்ளி, கல்லூரிகள் என
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள்
அதிகம் கூடும் இடமாகிய
வழிபாட்டு தலங்கள், பொது
போக்குவரத்து போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்,
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று
தீவிரமடைந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் கொரோனா
வைரஸால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த
சில நாட்களாகவே பலி
எண்ணிக்கையும் உயர்ந்து
வருகிறது. கொரோனா முதல்
அலையை விட தற்போது
பரவி வரும் இரண்டாம்
அலை சற்று அதிக
பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே
இந்த ஆண்டும் கொரோனா
பரவல் அதிகரித்து வருவதால்
அலுவலகங்களில் WORK FROM HOME முறையை
பின்பற்றலாம் என
தமிழக சுகாதாரத்துறை செயலர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் கூறுகையில்:
யாரெல்லாம் அலுவலகங்களுக்கு வராமல் வீட்டிலிருந்து பணிபுரிய
முடியுமோ, அவர்கள் தாமாகவே
முன் வந்து WORK FROM HOME முறையை
பின்பற்றலாம் என
தெரிவித்துள்ளார். மேலும்
அலுவலகங்களில் WORK FROM HOME முறையை
பின்பற்ற வேண்டும் என
அரசு அறிவிக்க வேண்டிய
அவசியம் இல்லை.