16.8 C
Innichen
Friday, August 1, 2025

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள் தடையின்றி படிப்பை தொடர காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச பேருந்து பயணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 உதவித்தொகை, இலவச பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு கல்வித் உதவித்தொகையாக சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களாக மாணவர்களால் செலுத்திய கட்டணம் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிங்களை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி உரிய முகவரிக்கு அனுப்பி வேண்டும். இல்லையென்றால், அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை – 5 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலே சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏதேனும் விண்ணப்பம் தொடர்பான சந்தேகம் இருந்தால் உதவி எண்களான 044 29515942 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்கள் குறித்து கேட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🌍 வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தமிழர்களுக்கு அரசு வழிகாட்டும் முக்கிய அறிவிப்பு. சட்ட விரோதமான வேலை வாய்ப்புகளை தவிர்க்க இவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🏦 IBPS Clerk Recruitment 2025 – மொத்தம் 10,277 பணியிடங்கள்! ஆன்லைன் பதிவு துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

IBPS CRP Clerk XV Notification 2025 வெளியாகியுள்ளது. மொத்தம் 10277 வாடிக்கையாளர் சேவை கூட்டாளர் (Clerk) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாநில வாரியாக காலியிடங்கள், தேர்வு முறை, சம்பளம் ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

Related Articles

Popular Categories