யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஆளப்
பிறந்தோம் – இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சி
‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்,
‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன்
இணைந்து நடத்தும் ‘ஆளப்
பிறந்தோம்’ எனும் வழிகாட்டு
நிகழ்ச்சி வரும் 31-ம்
தேதி காலை 10.30 மணிக்கு
இணையவழியில் நடைபெற உள்ளது.
UPSC,
TNPSC போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற
ஆசை பலருக்கும் உண்டு.
ஆனால், அதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி என்ன,
எத்தனை ஆண்டுகள் படிக்க
வேண்டும், எவ்வளவு செலவாகும்
என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான
தயக்கத்தைப் போக்கி, இந்த
தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில்
‘ஆளப் பிறந்தோம்’ என்ற
நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. காலை
10.30 மணிக்குத் தொடங்கும் இந்த
நிகழ்ச்சி மதியம் ஒரு
மணி வரை நடைபெறும்.
கரோனா
பரவல் காரணமாக வீடுகளில்
தனித்திருக்கும் பள்ளி,
கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/event/151-alapiranthome.html
என்ற லிங்க்.ல்
பதிவுசெய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


