வளர்ப்பு பெற்றோர்
ஆக விருப்பமா – குழந்தை
நலக்குழுவை அணுகலாம்
குழந்தைகள் நலக்குழுத் தலைவர் டாக்டர் விஜயசரவணன் கூறியதாவது:
ஆறு
வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே தத்து கொடுக்கப்படும். விண்ணப்பித்தால் 3 வாரத்திற்குள் ஆய்வறிக்கை தயார் செய்வோம். அந்த
குழந்தையுடன் நான்கு
வாரங்களுக்கு இல்லங்களுக்கு வந்து பழக விடுவோம்.
பெற்றோரின் அணுகுமுறை திருப்தியாக இருந்தால்
முதல் ஐந்தாண்டுகளுக்கு வளர்க்க
அனுமதி அளிக்கப்படும். ஆண்டுதோறும் ஆய்வின் மூலம் குழந்தையின் நலம் கண்காணிக்கப்படும். வளர்ப்பு
காலத்தில் குழந்தைகள் மீது
எந்த வன்முறைக்கும் இடமில்லை.
தவறு
செய்தால் தண்டனை உண்டு.
ஐந்தாண்டு முடிவில் திருப்தியாக இருந்தால் கடிதம் தருவோம்.
அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து முறையாக தத்தெடுக்க மனு
தாக்கல் செய்யலாம்.விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
சட்டவிரோதமாக குழந்தையை தத்தெடுத்து மாட்டிக்
கொள்வதை விட இது
எளிதானது. இந்த முறையால்
ஆதரவற்ற குழந்தைக்கு குடும்பம்
கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் 12 குழந்தைகளும் நேற்று
முன்தினம் 5 குழந்தைகளும் தத்து
கொடுக்கப்பட்டன. இன்னும்
ஒருவாரத்தில் 8 குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவர் என்றார்.
தொடர்புக்கு: 97895
15915.