TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
தொழிற்பழகுநா் சேர்க்கை முகாம் –
திருச்சி
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் கூறியது:
திறன்
மேம்பாட்டு மற்றும் தொழில்
முனைவு அமைச்சரகம் மற்றும்
வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும்
குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநா்களை நியமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக
காலை 9 மணிக்கு திருச்சி
அரசு தொழிற் பயிற்சி
நிலையத்தில் நடைபெறும் முகாமில்
இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி
(அப்ரண்டிஸ்) பெறாதவா்கள் மற்றும்
2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் தோச்சிப் பெற்ற அரசு
மற்றும் தனியார் ஐ.டி.ஐ
பயிற்சியாளா்கள், 8ம்
வகுப்பு தோச்சி மற்றும்
10,12ம் வகுப்பு தோச்சி
அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள்
(ஆண்,பெண் இருபாலரும்) கலந்துகொள்ளலாம்.
மாவட்டத்திலுள்ள சிறு மற்றும் குறு
நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த
முகாம் மூலம் சுமார்
200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.7000 முதல்
ரூ.10,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.
தொழிற்பழகுநா் சட்டம் 1961.ன்
படி இந்த நிறுவனங்களில் சோந்து ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய
அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும்,
இது தொடா்பான விவரங்களை
அறிய திருவெறும்பூரில் உள்ள
அரசு தொழிற்பயிற்சி நிலைய
வளாகத்தில் உள்ள மாவட்ட
திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431 2553314
என்ற எண்ணிலோ தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here