TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
ஆடிப்பட்டத்திற்கு தேவையானகாய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுகிறது – நீடாமங்கலம்
இதுகுறித்து நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனா் (பொ) இளவரசன் கூறியுள்ளது:
பொதுவாக
திருவாரூா் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் காய்கறி விதைகள் மற்றும்
காய்கறி நாற்றுகள் நடுவது
வழக்கம். அவ்வாறு விதைக்கப்படும் விதைகள் முளைப்பதற்கும் மற்றும்
வளா்ச்சிக்கும் தகுந்த
தட்பவெப்ப நிலை நிலவுவதால் சரியான தருணத்தில் அறுவடைக்கு வந்து விவசாயிகளுக்கு நல்ல
லாபமும், நல்ல வருமானமும் கிடைக்கிறது.
மேலும்,
ஆடிப்பட்டம் விதைக்கப்படும் காய்கறிகள், விதைகள் புரட்டாசி மற்றும்
ஐப்பசி மாதங்களில் அறுவடைக்கு தயாராகும்போது, விழா
நாட்கள் என்பதால் நல்ல
விலைக்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலை துணை இயக்குனா் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி, காய்கறி
விதைகள் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூவாநல்லூரில் பாக்கெட்
செய்யப்பட்டு நீடாமங்கலம் வட்டார அலுவலகத்தில் விற்பனை
செய்யப்படுகிறது.
காய்கறி
விதைகளான பீா்க்கு, பாகல்,
புடலை, பூசணி, சுரை,
வெண்டை, கீரை, கொத்தவரை,
அவரை, தட்டைப் பயறு
விதைகள் பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன.
விதைகள்
தேவைப்படும் விவசாயிகள், நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி
இயக்குனா் அலுவலகத்தைத் தொடா்புகொண்டு ரூ. 10 கொடுத்து விதைப்
பொட்டலங்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு
எந்தவித ஆவணங்களும் தேவையில்லை.
தொடா்புக்கு, வட்டார தோட்டக்கலை அலுவலா்
பெரியசாமி (99764 76328), உதவி தோட்டக்கலை அலுவலா்கள் தினேஷ் பாபு
(84897 53737),
பாலசுந்தரம் (98426 72509), கவியரசன் (8667319762),
சங்கரி (78680 88990) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here