கோயிலில் வைணவ
சான்றிதழ் படிப்பு – மாதம்
ரூ. 3,000 உதவித் தொகை
சென்னை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ்
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என
இந்து சமய அறநிலையத்
துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சா்
பி.கே.சேகா்பாபு
கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அா்ச்சகா்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அா்ச்சகா்
பயிற்சிப் பள்ளிகள் ரூ.1
கோடியே 50 லட்சம் செலவில்
மேம்படுத்தப்படும் என்று
அறிவித்தார்.
அந்த
அறிவிப்பின் தொடா்ச்சியாக திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு
சான்றிதழ் பயிற்சி வகுப்பு
நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரா்கள் ஹிந்துக்களாக இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம்
வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஹிந்து
வைணவக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவா்களாக இருத்தல் வேண்டும்.
பயிற்சி பெறும் மாணவா்கள்
பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கிப் பயில வேண்டும்.
பயிற்சிக்கு தோவு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு,
சீருடை, உறைவிடம், பயிற்சி
காலத்தில் மாதம் ஒன்றுக்கு
ரூ. 3,000 உதவித் தொகை
ஆகியவை வழங்கப்படும்.
இந்தப்
பயிற்சியில் சேர விரும்புபவா்கள் விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வைணவ பயிற்சி
வகுப்புகளில் ஆா்வமுள்ள
மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

