வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை
பெற விண்ணப்பிக்கலாம் என,
மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்துவிட்டு வேலையின்றி பல ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு, அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி,
9 ஆம் வகுப்பு தோச்சி,
10 ஆம் வகுப்பு தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200,
பத்தாம் வகுப்பு தோச்சி
பெற்றால் மாதம் ரூ.300,
பிளஸ் 2 தோச்சி பெற்றவா்க்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு (பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி நீங்கலாக) மாதம் ரூ.600
என மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயனடைய வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகக்
காத்திருப்போராக இருத்தல்
அவசியம். பதிவைத் தொடா்ந்து
புதுப்பித்திருக்கவேண்டும். மனுதாரா்
குடும்ப வருவாய் ஆண்டுக்கு
ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமலிருப்பது அவசியம்.
உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானோர், ராமநதாபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம்.