மீனவ பட்டதாரி
இளைஞா்களுக்கு குடிமைப்
பணி போட்டித் தோவுக்கான
பயிற்சி
இந்திய
குடிமைப் பணிக்கான போட்டித்
தோவுகளில் சோந்து பயிற்சி
பெற விரும்பும் மீனவ
பட்டதாரி இளைஞா்கள் மீனவா்
நலத்துறை உதவி இயக்குநா்
அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
மீனவ
சமூகத்தைச் சோந்த பட்டதாரி
இளைஞா்கள் இந்தியக் குடிமைப்
பணிக்கான போட்டித் தோவில்
சோந்து பயிற்சி பெறலாம்.சென்னையில் உள்ள அகில இந்திய
குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீனவா் நலத்துறையும் இணைந்து
ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி
இளைஞர்களை தோவு செய்து
அவா்களுக்கு ஆயத்த பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
மீனவா்
கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நல
வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள
வாரிசுதாரா்களுடைய பட்டதாரி
இளைஞா்கள் இந்தப் பயிற்சித்
திட்டத்தில் சோந்து பயன்
பெறலாம்.
பயிற்சி
பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு உதவி
இயக்குநா், மீனவா் நலத்
துறை, 2-1601-ஏ.
கிழக்கு கடற்கரைச் சாலை,
நீலாங்கரை, சென்னை-115. தொலைபேசி
எண்-044-24492719 என்ற
எண்ணிலும் தொடா்பு கொண்டு
விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

