
TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 29 முதல் தொடக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜன.29 ஆம் தேதி முதல் நடைபெறும் என சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜன.29 முதல் தொடங்கப்படவுள்ளன. கிண்டியிலுள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இவ்வகுப்புகள் வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள்
கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு,
மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

