HomeBlogTNPSC குரூப் - 4 எழுத்துத் தேர்வின் போது கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள்

TNPSC குரூப் – 4 எழுத்துத் தேர்வின் போது கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள்

TNPSC குரூப் – 4 எழுத்துத் தேர்வின் போது கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள்




எழுத்துத்
தேர்வு மொத்தம் 200 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். பொதுப்பிரிவில் இருந்து 75 கேள்விகளும், 25 கேள்விகள்
ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன்
பிரிவில் இருந்தும் கேட்கப்படும். மீதம் உள்ள 100 கேள்விகள்
பொது தமிழ் அல்லது
பொது ஆங்கிலம் பிரிவில்
இருந்து கேட்கப்படும்.
v
தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து புத்தகம்,
நோட்ஸ், தாள்கள், செல்போன்,
ப்ளூடூத், வாட்ச் போன்ற
எலக்ட்ரானிக் பொருட்கள்,
கால்குலேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுச் செல்வதற்கு அனுமதி
இல்லை.
v
லாக் டேபிள், ஸ்டென்சில்ஸ், மேப்புகள், ரஃப் தாள்கள்
கொண்டுச் செல்லக் கூடாது.
v
தேர்வு அறைக்கு 30 நிமிடம்
தாமதமாக வருபவர்கள் தேர்வு
எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
v
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு
மையத்தில்தான் எழுத
வேண்டும். அதற்கு பதிலாக
வேறொரு மையத்தில் எழுதினால்,
விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.
v
தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள் வழங்கப்படும்.
v
வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர்,
அது முழுவதும் அச்சடிக்கப்பட்டுள்ளதா, பழுதின்றி இருக்கிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறைபாடு
ஏதும் இருந்தால் தரப்பட்ட
10
நிமிடங்களுக்குள் கண்காணிப்பாளரிடம் அளித்து மாற்றிக்
கொள்ள வேண்டும். தேர்வு
தொடங்கிய பின்னர் முறையிட்டால் வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் மாற்றித் தரப்பட மாட்டாது.
v
ஹால் டிக்கெட் (Hall Ticket), நீலம்
அல்து கருப்பு மை
பேனா மட்டுமே தேர்வு
அறைக்குள் எடுத்து வர
வேண்டும். மற்ற எந்த
பொருளை கொண்டுவரவும் அனுமதியில்லை. விதியை மீறுவோர் எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க தகுதியற்றவர்களாக கருப்படுவார்கள்.
v
தேர்வர்கள் மற்றவர்களிடம் இருந்து
எந்த பொருளையும் வாங்க
தடை செய்யப்பட்டுள்ளது.
v
தேர்வு நேரம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதேபோன்று தேர்வு
நேரம் முடிவதற்கு முன்பாக
தேர்வர்கள் அறையை விட்டு
வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
v
வினாத்தாள் (Question Paper) தவறுள்ளதாக கருதினால் தேர்வு முடிந்த
2
நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், முகவரி,
கேள்வி எண், வினாத்தாள் வரிசை எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வினாத்தாள் நகலுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு முறையீடு செய்ய
வேண்டும். 2 நாட்களை தாண்டினால் கோரிக்கை ஏற்கப்படாது.




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!