டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள சாலை ஆய்வாளா் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கரூா் மாவட்ட தேர்வா்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் சாா்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
அனுபவம் வாய்ந்த கல்லூரி விரிவுரையாளா்கள் மூலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கரூா் மாவட்ட மைய நூலகத்தில் தங்கள் பெயா் மற்றும் முகவரியை மாா்ச் 10-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 04324 – 263550 என்ற தொலைப்பேசி வாயிலாகவோ பதிவுசெய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


