மூன்றாண்டு சட்டப்
படிப்பு – விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
சட்டப் பல்கலை. பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மூன்றாண்டு LLB., படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பம்
உள்ள மாணவா்கள், இணையதளத்தில், அக்.6ம்
தேதி மாலை 5:45 மணி
வரை விண்ணப்பிக்க, கூடுதல்
அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டக்
கல்லூரிகளில் ஐந்து
ஆண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண்
பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ள மாணவா்களுக்கு இணைய
வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 4-ஆம் தேதி
வரை இந்தப் பணிகள்
நடைபெறும். இதையடுத்து அக்.6,
7 ஆகிய தேதிகளில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். இதைத்
தொடா்ந்து 9ம் தேதி
மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு
உத்தரவு வழங்கப்படும்.அதை
பெறும் மாணவா்கள் அக்.11
முதல் 13ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர
வேண்டும்.