TAMIL MIXER
EDUCATION.ன்
ஓய்வூதிய
செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு
பழைய
ஓய்வூதிய
திட்டம்
இல்லை
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு
கடந்த
அக்டோபர்
மாதம்
அகவிலைப்படியை
4 சதவீதம்
உயர்த்தியது.
தற்போது
மத்திய
அரசு
ஊழியர்கள்
மொத்தம்
38% அகவிலைப்படியை
பெற்று
வருகின்றனர்.
இந்த நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களையும்
நடத்தி
வருவது
குறிப்பிடத்தக்கது.
தற்போது
ராஜஸ்தான்,
பஞ்சாப்,
சத்தீஸ்கர்
உள்ளிட்ட
மாநிலங்களில்
மட்டும்
மீண்டும்
பழைய
ஊதிய
திட்டம்
அமல்படுத்தப்படும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற
மாநிலங்களிலோ
மத்திய
அரசோ
இது
போன்று
எந்த
அறிவிப்பையும்
இதுவரை
வெளியிடவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில்
அசாதுதீன்
எம்.பி பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துமா?
என்றும்
ஏற்கனவே
பழைய
ஓய்வூதிய
திட்டத்தை
அமல்படுத்துவதாக
அறிவித்துள்ள
மாநில
அரசுகள்
குறித்தும்
கேள்வி
எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக
அறிவித்துள்ள
மாநில
அரசுகள்
பென்ஷன்
ஒழுங்குமுறை
ஆணையத்திடம்
தேசிய
பென்ஷன்
நிதியை
வழங்குமாறு
கோரிக்கை
விடுத்தது.
இந்த கோரிக்கையை ஆணையம் மறுத்துவிட்டது.
மேலும்
மத்திய
அரசு
ஊழியர்களுக்கு
பழைய
ஓய்வூதிய
திட்டத்தை
அமல்படுத்தும்
நோக்கம்
இல்லை.