HomeBlogஊராட்சி மன்ற தலைவர்களின்‌ மதிப்பு ஊதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
- Advertisment -

ஊராட்சி மன்ற தலைவர்களின்‌ மதிப்பு ஊதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

The value pay of panchayat leaders will be increased to Rs. 2,000

ஊராட்சி மன்ற
தலைவர்களின் மதிப்பு
ஊதியம் ரூ.2,000 ஆக
உயர்த்தி வழங்கப்படும்

ஊரக
வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களால்
2021-2022-
ஆம் நிதியாண்டிற்கான ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சி
துறைக்கான மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் ஊராட்சி
மன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

எனவே,
அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி
மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக
உயர்த்தப்படும் என
தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட
அறிவிப்பின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சி
இயக்குநரிடம் இருந்து
கருத்து கோரி பெறப்பட்டது. கிராம ஊராட்சிகளில்.

கிராம
ஊராட்சித் தலைவர்கள் அவ்வூராட்சியின் 
நிர்வாக அலுவலர் என்கிற
முறையில் கிராம
ஊராட்சியில் நடைபெறும் மாநில
அரசு திட்டங்கள் மற்றும் ஒன்றிய
அரசு திட்டங்கள் ஆகியவற்றை
முழுமையாக செயல்படுத்திடும் முக்கிய
பொறுப்பில் உள்ளனர் எனவும், ஊராட்சிகளால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர்
வழங்குதல், தெருவிளக்குகள் அமைத்து பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு
வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு
82-
ல் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சிகள் திருத்தச் சட்டம் 2012 (தமிழ்நாடு
சட்டம் 15/2012-ன் படி
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை காலத்திற்கேற்ப அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே
ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு மாதாந்திர
மதிப்பூதியம் ரூ.1,000
லிருந்து ரூ.2,000 ஆக
உயர்த்தி வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -