TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
மாணவியருக்கான ரூ.1000
உயர் கல்வி உதவித்
தொகை பெறுவதற்கான தகுதிகளை
தமிழக அரசு வெளியிட்டுள்ளது
2022-2023ம்
கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம்
ஆண்டு சேர்ந்த பின்னர்,
இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
6ம்
வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை அரசுப்
பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல்
வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தனியார்
பள்ளியில் கல்வி உரிமை
சட்டத்தின் கீழ் 6ம்
வகுப்பு முதல் 8ம்
வகுப்பு வரை பயின்ற
பின் 9ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு
வரை அரசுப் பள்ளியில்
படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
மாணவிகள்
8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்
முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே
இத்திட்டம் பொருந்தும்.
சான்றிதழ்,
பட்டயம், இளங்கலைப் பட்டம்,
தொழில் சார்ந்த படிப்பு
மற்றும் பாரா மெடிக்கல்
படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கு பொருந்தும்.
தொலைதூரக்
கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும்
மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
இணையதளம்
https://penkalvi.tn.gov.in வழியாக
தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல்
தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


