போட்டித் தேர்வுக்கான பயிற்சிக்கு
தேர்வானவர்களுக்கு 23ம்
தேதி
முதல்
பயிற்சி
குரூப்
4 தேர்வுக்கான பயிற்சிகளை தமிழ்நாடு
அரசு போட்டித் தேர்வுகள்
பயிற்சி மையம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறை தலைவருமான வெளியிட்ட அறிவிப்பு:
குரூப்
4 தேர்வில் கலந்து கொள்ளும்
தேர்வா்களுக்கு தமிழக
அரசின் சாதேர்பில் இயங்கும்
போட்டித் தேர்வுகள் பயிற்சி
மையத்தின் வழியே பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. சென்னை
வண்ணாரப்பேட்டை சா்
தியாகராயா கல்லூரி, நந்தனம்
அரசினா் ஆடவா் கலைக்
கல்லூரி ஆகிய இடங்களில்
கட்டணம் இல்லாமல் பயிற்சி
வழங்கப்படுகிறது. இதற்காக
இணைய வழியே கடந்த
11ம் தேதி வரை
விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பத்தாம் வகுப்பில் பெற்ற
மதிப்பெண்கள், அரசால்
பின்பற்றப்படும் இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வா்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனா்.
தெரிவு
செய்யப்பட்டோருக்கு அழைப்புக்
கடிதங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தை
பதிவிறக்கம் செய்து பயிற்சி
மையங்களில் சான்றிதழ் சரிபார்பபுக்காக எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பதாரா்களுக்கான சேர்க்கை
நாள், நேரம் ஆகியன
அழைப்புக் கடிதங்களில் அளிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி
வகுப்புகள் வரும் 23ம்
தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.