10ஆம் வகுப்பு படித்தவா்கள் ஜவுளித் துறையில் நூற்பு, தொழில்நுட்ப பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: வேளாண்மைக்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின்( நஐபதஅ) மூலமாக 10, 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்களுக்கு, நூற்பு, தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா், ட்ற்ற்ல்ள்://ற்ய்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ர்க்ஷள்/ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, ‘மண்டல துணை இயக்குநா், ஜவுளி துறை, எண்.502, 5-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்- 641604’ என்ற முகவரியில் நேரிலும், rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04212220095 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow