TANCET நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
முதுநிலை
என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்.,
எம்.ஆர்க்., எம்.பிளான்
மற்றும் எம்.பி.ஏ.
எம்.சி.ஏ.
படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது
நுழைவுத்தேர்வு என்று
அழைக்கப்படும் TANCET தேர்வில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வை ஒவ்வொரு
வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அதன்படி,
2022-2023ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை
வெளியிட்டு இருக்கிறது. இதற்கான
தேர்வு வருகிற மே
மாதம் 14 மற்றும் 15ந்
தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த
தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் (ஏப்ரல்)
18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா
பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு
விண்ணப்பிக்க காலகெடு
நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி,
டான்செட் பொது நுழைவு
தேர்வுக்கு வரும் 21-ம்
தேதி மாலை 4 மணி
வரை https://tancet.annauniv.edu/tancet/
என்ற இணையதளத்தில் ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.