TAMIL MIXER
EDUCATION.ன்
தூய்மை
இந்தியா
திட்ட செய்திகள்
தூய்மை இந்தியா திட்டம் – QR Code மூலம் கழிப்பிடம் குறித்து புகார் அளிக்கலாம்
இந்தியாவை தூய்மைப்படுத்தும்
முயற்சியில்
பிரதமர்
மோடி
தலைமையிலான
அரசு
கடந்த
2014ம்
ஆண்டு
தூய்மை
இந்தியா
2.0 என்ற
திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்
கீழ்
கிராம
புறங்களில்
போதிய
குடிநீர்,
சுகாதாரமான
சுற்றுப்புற
சூழல்,
முறையான
கழிப்பறை
ஆகிய
வசதிகள்
மக்களுக்கு
ஏற்படுத்தி
தரப்பட்டது.
தற்போது எண்ணற்ற கிராமங்களில்
கழிப்பறைகள்
திறந்தவெளியில்
இல்லாமல்
அதற்கு
மாற்றாக
தூய்மையான
தனி
கழிப்பறைகள்
உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தெருக்கள் வாரியாக மக்களுக்கு பொது கழிப்பறைகளும்
கட்டித்
தரப்பட்டுள்ளது.
தற்போது
இத்திட்டத்தின்
கீழ்
தமிழக
நகராட்சி
பகுதிகளில்
உள்ள
பொதுக்
கழிப்பறைகளை
தூய்மையாக
பராமரிக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதாரமற்ற கழிப்பிடங்கள்
குறித்து
பொதுமக்கள்
புகார்
தெரிவிக்கலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்
தெரிவிக்க
வசதியாக
கழிவறைகளின்
நுழைவாயிலில்
QR Code பொருத்தும்
பணி
நடைபெற்று
வருகிறது.
இந்த QR கோடை செல்போன் வாயிலாக ஸ்கேன் செய்து நேரடியாக இணையதளத்தில்
புகார்
தெரிவிக்கலாம்.
மேலும்
5 ஸ்டார்
மதிப்பீடு
வழங்கும்
வசதியும்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
இந்த
இணையதளத்தில்
கழிவறையில்
சுத்தம்,
பாதுகாப்பு,
வெளிச்சம்,
துர்நாற்றம்
உள்ளிட்டவைகள்
குறித்து
7 கேள்விகள்
இடம்பெறும்.
இதன் வாயிலாக வரும் புகார்கள் குறித்து அந்தந்த நகராட்சிக்கு
தகவல்
தெரிவிக்கப்பட்டு
உரிய
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


