சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், சென்னை, விழுப்புரம், வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச மாதிரித் தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.
இதில், 3,258-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தோ்வுக்குப் பின்னா், மாணவா்களுக்கு விடைக் குறிப்புகள் வழங்கப்பட்டன.
கிழக்கு மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மன்னாா்குடி ஆகிய இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) காலை 10 மணிக்கு தோ்வு நடைபெறும்.
பின்னா், தெற்கு, மத்திய மண்டலங்களில் தோ்வுகள் நடைபெறும். இலவச மாதிரித் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 96004 94526 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தெரிவித்துள்ளாா்.