TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரிசு வேலை பெற்றவர்கள், கூட்டுறவு பயிற்சியை நிறைவு செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு
அவகாசம்
கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில், 2019 முதல் 2021 வரை வாரிசு வேலை பெற்றவர்கள், கூட்டுறவு பயிற்சியை நிறைவு செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு
அவகாசம்
அளித்து,
கூட்டுறவுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில்
வேலைக்கு
சேருவோர்,
கூட்டுறவு
தொடர்பான
பாடங்களை
படித்திருக்க
வேண்டும்.
கூட்டுறவு
பயிற்சி
பெற்றிருக்க
வேண்டும்.எனவே, வாரிசு வேலைக்கு சேர்ந்தவர்கள்,
இரண்டு
ஆண்டுகளுக்குள்
கூட்டுறவு
பயிற்சி
முடிக்க
வேண்டும்.
இல்லையேல், பதவி உயர்வு பெறுவதில் தாமதம் ஏற்படும்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்த
ஊழியர்களின்
வாரிசுகளுக்கு,
கருணை
அடிப்படையில்
வேலை
வழங்கப்பட்டு
உள்ளது.
இதையடுத்து, 2019 – 2020, 2020
– 2021ல்
கருணை
அடிப்படையில்
பணி
நியமனம்
செய்யப்பட்டவர்கள்
மட்டும்,
மூன்று
ஆண்டுகளுக்குள்
கூட்டுறவு
பயிற்சியை
நிறைவு
செய்ய
அவகாசம்
அளிக்கப்பட்டு
உள்ளது.