TAMIL MIXER
EDUCATION.ன்
புதுச்சேரி செய்திகள்
தொழிற்சாலைகளுக்கு
சிறப்பு
சலுகைகள்
– விரைவில்
அறிவிப்பு வெளியாகும்
புதுச்சேரியில்
தொழில்
தொடங்க
முனைவோருக்கு
மின்
கட்டண
சலுகை,
வரிச்
சலுகை,
மானியத்துடன்
கடன்
வசதி
உள்ளிட்ட
சலுகைகளை
அரசு
வழங்கி
வந்தது.
இதனால்
இளைய
தலைமுறையினர்
பலரும்
ஆர்வத்துடன்
தொழில்
தொடங்கினர்.
ஆனால்
அண்மை
காலமாக
இந்த
நிலைமை
முற்றிலும்
மாற்றமடைந்துள்ளது.
அதாவது தொழிற்சாலைகளுக்கு
அளிக்கப்பட்டு
வந்த
சலுகைகள்
முற்றிலும்
அரசால்
குறைக்கப்பட்டது.
அத்துடன்
தொழிலாளர்
பிரச்சனை,
மாமூல்
கேட்டு
மிரட்டுவது,
தொழிற்சங்கங்களின்
நெருக்கடி
ஆகிய
பல்வேறு
காரணங்களால்
பெரும்பாலான
தொழிற்சாலைகள்
இழுத்து
மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள்
கொண்டு
வர
மத்திய
அரசு
அனுமதி
அளித்துள்ளது.
இதன்
மூலமாக
ஏராளமான
இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு
கிடைக்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பற்ற
நிலையை
உருவாக்க
மீண்டும்
தொழிற்சாலைகளுக்கு
சில
சலுகைகளை
வழங்க
உள்ளது.
இது
தொடர்பாக
வருவாய்
துறை,
உள்ளாட்சித்
துறை,
தொழில்துறையினருடன்
ஆலோசனை
கூட்டத்தை
வருகிற
டிசம்பர்
1ம்
தேதி
அன்று
நடத்த
இருப்பதாகவும்
தகவல்
வெளியாகியுள்ளது.
இதில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு
வழங்கப்பட
வேண்டிய
சலுகைகள்
குறித்தும்
ஆலோசனை
மேற்கொள்ளப்படும்.