விவசாய கடன்
அட்டை வழங்கும் சிறப்பு
முகாம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கடன்
அட்டை வழங்கும் சிறப்பு
முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 வரை நடக்கிறது.
பிரதம
மந்திரி விவசாயி கவுரவநிதி
உதவி பெறுபவர்கள் இதுவரை
கடன் அட்டைபெறாமல் இருந்தால்,
உரிய படிவம், ஆதார்,
பட்டா, வங்கி கணக்கு
புத்தக நகல், அடங்கல்,
புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதற்கு
வசதியாக ஏப்.,24 முதல்
மே 1 வரை அனைத்து
ஊராட்சிகளில் சிறப்பு
முகாம் நடக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளின் விண்ணப்ப படிவத்தை பரிசீலனை
செய்து விதிகளுக்கு உட்பட்டு
கடன் அட்டை வழங்கப்படும்.
வேளாண்பயிர், தோட்டக்கலை பயிர் மட்டுமின்றி கால்நடைகள், மீன்வளர்ப்பில் ஈடுபடுவர்களுக்கும் கடன்அட்டை வழங்கப்படும். கிராம சபைக்கூட்டத்திலும் வேளாண்துறை செயல் படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகள் விபரம் தெரிவிக்கிறோம் என ராமநாதபுரம் வேளாண்
இணை இயக்குனர் (பொ)
சேக்அப்துல்லா தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


