ஜவுளித் துறையில் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜவுளித்துறையில் வேலையில்லாத இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய பொருளாதாரத்தில் ஜவுளி தொழில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை ஜவுளித்துறை வழங்குகிறது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழகஅரசு, துணிநூல்துறை மூலம் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (இருபாலா்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி பெற விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் இப்பயிற்சி தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல்துறை, கரூா் அலுவலகத்தை அணுகவேண்டியமுகவரி : மண்டலதுணைஇயக்குநா், மண்டலதுணை இயக்குநா் அலுவலகம்,
துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூா்-639005 தொலைபேசி எண் :04324– 299 544 என தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow