HomeBlogகட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisment -

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Skill development training for construction workers

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு
திறன்
மேம்பாட்டு
பயிற்சி

கட்டுமான தொழிலாளா்கள்
பயன்பெறும்
வகையில்
3
மாதம்,
ஒரு
வார
கால
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
அளிக்கும்
திட்டம்
தொழிலாளா்
நலன்
மற்றும்
திறன்
மேம்பாட்டுத்துறை
மூலம்
செயல்படுத்தி
வருவதாகவும்,
இதற்காக
ரூ.800
ஊக்கத்
தொகை
வழங்கவும்
நடவடிக்கை
எடுத்துள்ளதாக
அதிகாரிகள்
தெரிவித்தனா்.

மாநில அளவில் கட்டுமான தொழிலாளா்கள்
பயன்பெறும்
வகையில்
கட்டுமான
தொழிலாளா்
நலவாரியம்
மூலம்
பல்வேறு
வகையான
நலத்திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

அந்த வகையில் கட்டுமான நலவாரியத்தில்
பதிவு
செய்துள்ளோர்
வேலைவாய்ப்பு
பெறும்
வகையில்
3
மாதம்
மற்றும்
ஒரு
வாரம்
என
கட்டுமான
தொழிலாளா்களுக்கு
பயிற்சி
அளிக்கும்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில்
கட்டுமான
நலவாரியத்தில்
60,000
மேற்பட்டோர்
பதிவு
செய்துள்ளனா்.
இந்த
தொழிலாளா்கள்
பயன்பெறும்
வகையில்
திருவள்ளூா்
மாவட்டம்
அருகே
தமிழ்நாடு
கட்டுமான
கழகத்தில்
கட்டுமானத்
தொழிலாளா்களுக்கு
3
மாதம்
மற்றும்
ஒருவார
கால
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கட்டுமானத் தொழிலாளா்கள்
நலவாரியத்தில்
உறுப்பினா்களாக
பதிவு
செய்து
3
ஆண்டுகள்
நிறைவு
செய்த
தொழிலாளா்கள்
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி பெற தொழிலாளா்களுக்கு
தமிழ்
எழுத
படிக்க
தெரிந்திருக்க
வேண்டும்.
அதோடு,
5
முதல்
பிளஸ்2,
ஐடிஐ
முடித்த
18
முதல்
40
வயதுக்குள்பட்டவராக
இருப்பது
அவசியம்.
இந்த
பயிற்சிக்கான
கட்டணம்,
உணவு,
தங்குமிடம்
இலவசமாக
வழங்கப்படும்.

பயிற்சி பெறும் அனைவருக்கும்
எல்
அண்டு
டி
கட்டுமான
திறன்
பயிற்சி
நிறுவனம்
100
சதவீத
வேலை
வாய்ப்பையும்
உறுதி
செய்துள்ளது.
இதில்
கொத்தனார்,
பற்றவைப்பவா்,
மின்சார
பயிற்சி,
குழாய்
பொருத்துநா்,
மர
வேலை,
கம்பி
வளைப்பவா்,
கார்பெண்டா்,
பார்பெண்டிங்
மற்றும்
சாரம்
கட்டுபவா்
போன்ற
தொழிலாளிகளுக்கு
பயிற்சி
அளிக்கவும்
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 3 மாத பயிற்சியானது
முதல்
ஒரு
மாதம்
தையூரில்
உள்ள
கட்டுமான
கழக
பயிற்சி
நிறுவனத்திலும்,
அடுத்த
2
மாதம்
காஞ்சிபுரம்
மாவட்ட
நீவளூரில்
அமைந்துள்ள
எல்
அண்டு
டி
கட்டுமான
திறன்
பயிற்சி
நிலையத்திலும்
நடைபெற
உள்ளது.

அதேபோல் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருவள்ளூா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை(.பா.தி) அதிகாரி ஒருவா் கூறுகையில்:

இதற்கு முன்பு இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளா்களுக்கு
குறைந்த
நாள்
பயிற்சியும்,
பயணப்படி
மற்றும்
மதிய
உணவும்
மட்டுமே
வழங்கப்பட்டு
வந்தது.
நிகழாண்டு
முதல்
இப்பயிற்சியில்
கட்டுமான
தொழிலாளா்களை
அதிகளவில்
பங்கேற்கச்
செய்யும்
வகையில்
ஊக்கத்தொகை
வழங்கவும்
உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் நாள்தோறும் ரூ.800 ஊக்க தொகையுடன் பயிற்சி வழங்கப்படவுள்ளன.
இத்தொகையிலிருந்து
மதிய
உணவுக்கு
மட்டும்
பிடித்தம்
செய்யப்படும்.
இந்த
திறன்
பயிற்சியில்
சோந்து
பயன்பெற
விரும்பும்
கட்டுமான
தொழிலாளா்கள்
தங்கள்
நலவாரிய
அட்டை,
கல்வி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை
மற்றும்
குடும்ப
அட்டை
உள்ளிட்ட
நகல்களுடன்
அந்தந்த
பகுதி
தொழிலாளா்
உதவி
ஆணையா்
(
சமூக
பாதுகாப்புத்
திட்டம்)
அலுவலகத்தில்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -