திறன் மேம்பாட்டுப் பயிற்சி
– நிலமில்லா விவசாயிகள், படித்த,
படிக்காத இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
அரியலூா்
மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள அரசு
தோட்டக் கலைப் பண்ணையில்
நடைபெறவுள்ள திறன்மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவா்கள் மே 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என ஆட்சியா் தெரிவித்துள்ளாதேர்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிதேர்கள் துறை
சாதேர்பில் பூங்கொத்து மற்றும்
பூ அலங்காரம் செய்தல்,
தேனீ வளா்ப்பு மற்றும்
நுண்ணீா் பாசன அமைப்பு
நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை
அடங்கிய 30 நாள்கள் இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோதேர் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை
பூா்த்தி செய்து 23.05.2022க்குள்
சம்மந்தப்பட்ட வட்டார
தோட்டக்கலை உதவி இயக்குநா்
அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு 30 நாள்களுக்கு தினமும் ரூ.100 என
போக்குவரத்துப் படியாக
அவா்களது வங்கிக் கணக்கில்
நேரடியாகச் செலுத்தப்படும். இந்த
வாய்ப்பை நிலமில்லா விவசாயிகள், படித்த, படிக்காத இளைஞா்கள்
பயன்படுத்திக் கொள்ளலாம்.