ஓவியம், மாறுவேட போட்டிக்கு படைப்புகளை அனுப்பலாம்
காந்தி
நினைவு அருங்காட்சியகமும், அரசு
அருங்காட்சியகமும் இணைந்து
இப்போட்டிகளை நடத்துகின்றன. ஓவியப் போட்டியில் அமைதிப்
புறா என்ற தலைப்பில்
ஓவியம் வரைய வேண்டும்.
A4 அளவு தாளில்
வரைந்து பெயா், வகுப்பு,
பிரிவு, பள்ளியின் பெயா்,
வீட்டு முகவரி, பெற்றோர்
கைப்பேசி எண் ஆகியவற்றை
ஓவியத்தின் பின்புறம் குறிப்பிட
வேண்டும். ஓவியங்களை நவம்பா்
16-ம் தேதிக்குகள் தேதிக்குகள்
செயலா்,
காந்தி
நினைவு
அருங்காட்சியகம், மதுரை-625020
என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
மாறுவேடப்
போட்டியில், இந்திய விடுதலை
இயக்கத் தலைவா்களின் வேடமிட்டு
ஒரு நிமிடம் அளவுக்கு
விடியோ பதிவு செய்து
(museumoffice@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா் குறித்த அனைத்து
விவரங்களுடன் நவம்பா்
16-ம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
ஆறு
முதல் 8 ஆம் வகுப்பு
வரையிலான மாணவா்களுக்கு அழகிய
கையெழுத்துப் போட்டி
நடத்தப்படுகிறது. மகாத்மா
காந்தியடிகளின் சுயசரிதையான சத்திய சோதனையின் முதல்
பாகம் முதல் அத்தியாயம் ‘பிறப்பும் பெற்றோரும்‘ இருந்து
முதல் பத்தியை கோடிட்ட
தாளில் எழுதி, மாணவா்
பெயா், முகவரி விவரம்,
கைப்பேசி எண் குறிப்பிட்டு பெற்றோர் கையெழுத்து பெற்று
காப்பாட்சியா், அரசு
அருங்காட்சியகம், மதுரை-20
என்ற முகவரிக்கு நவம்பா்
16-ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும்.
போட்டிகள்
குறித்த மேலும் விவரங்களுக்கு காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலரை 98657 91420 என்ற
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.