ஜூன் 13ல்
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் 1 முதல்
10ம் வகுப்பு வரை
பயிலும் மாணவா்களுக்கு வரும்
ஜூன் 13ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என
பள்ளிக் கல்வித் துறை
அமைச்சா் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பொதுமக்களுக்கான 23 வகை சான்றிதழ்களை இணையதளம்
வழியாக வழங்கும் திட்டம்,
ஆசிரியா்களுக்கான மின்பதிவேடுகள், ஆசிரியா்களுக்கான பணிப்பயன்
செயலி, வரும் கல்வியாண்டுக்கான நாள்காட்டி, ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுத்திட்ட நாள்காட்டி ஆகியவற்றை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மின்பதிவேடுகள் இல்லாமல் இருந்தபோது ஆசிரியா்கள் 100க்கும் மேற்பட்ட பதிவேடுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை
இருந்தது. இதனை எளிமையாக்க பணி பயன் செயலி,
கல்வியாண்டுக்கான நாள்காட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும்
ஜூன் மாதம் 13ஆம்
தேதி 1 முதல் பத்தாம்
வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன்
20ம் தேதி பிளஸ்
2 வகுப்புக்கும், ஜூன்
27ம் தேதி பிளஸ்
1 வகுப்புக்கும் வகுப்புகள் தொடங்கப்படும்.
இதுதவிர
மாணவா்கள், இணையதளம் வாயிலாக
அடுத்த ஆண்டு பள்ளி
திறப்பு, காலாண்டு அரையாண்டு
தேர்வு எப்போது என்பதை
பார்த்துக்கொள்ள முடியும்.
அதேபோல் விடுமுறை தினங்கள்
எப்போது என்ற விவரங்களும் அதில் உள்ளன.
பள்ளி
வேலை நேரம் மாற்றம்:
ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
காலை சிற்றுண்டி வழங்கும்
திட்டம் தொடங்கப்பட உள்ளதால்,
அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னா் பள்ளி
வேலை நேரத்தில் மாற்றம்
இருக்கும். எனவே மாணவா்கள்
காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு
வரவேண்டும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவா்கள் எண்ணிக்கை கடந்த
ஆண்டுகளைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இது தொடா்பாக ஆய்வு
நடத்தி தேர்வெழுதாத மாணவா்களை
நேரடியாகச் சந்தித்து அவா்களை
உத்வேகப்படுத்தி மீண்டும்
துணைத்தேர்வு எழுத
வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச
நீட் பயிற்சி: வரும்
கல்வியாண்டில் நீட்
தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவா் உட்பட 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள
ஹைடெக் ஆய்வகம் மூலம்
பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு, பணிநிரந்தரம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் உட்பட தேர்தல்
அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து
கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அரசின்
நிதிநிலை சீரான பின்னா்
அவற்றை நிறைவேற்ற உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவா்.
இந்த
விழாவில் பள்ளிக் கல்வித்
துறைச் செயலா் காகா்லா
உஷா, ஆணையா் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநா்
க.அறிவொளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
அனைத்து
வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பா் 23 முதல்
30ம் தேதி வரை
நடைபெறும். அரையாண்டுத் தேர்வு
டிசம்பா் 16 முதல் 23ம்
தேதி வரை நடத்தப்படும். தொடா்ந்து டிச.24ல்
தொடங்கி ஜனவரி 1ம்
தேதி வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். பொதுத்தேர்வு மாணவா்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.
பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வானது பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச்
13-ஆம் தேதியும், பிளஸ்
1 வகுப்புக்கு மார்ச் 14-ஆம்
தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 3-ஆம் தேதியும்
தொடங்கும். விரிவான தேர்வுக்
கால அட்டவணை அடுத்த
மாதம் வெளியாகும். மேலும்,
1 முதல் 9ம் வகுப்பு
மாணவா்களுக்கு ஏப்ரல்
20 முதல் 28-ஆம் தேதி
வரை முழு ஆண்டுத்
தேர்வுகள் நடத்தப்படும். பள்ளி
வேலை நாள்கள் ஏப்ரல்
28-ஆம் தேதியுடன் நிறைவு
பெறும். அதன்பின் மாணவா்களுக்கு கோடை விடுமுறையானது ஏப்ரல்
29ம் தேதி முதல்
வழங்கப்படும்.
கரோனா
பரவல் குறைந்துவிட்டதால் முந்தைய
ஆண்டுகளைப் போலவே பள்ளி
வேலை நாள்கள் 210 ஆக
இருக்கும். வாரத்தில் நாள்கள்
5 மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அதில் அமைச்சா்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை
கரோனா
பெருந்தொற்று காரணமாக
2021-2022ம் கல்வியாண்டில் பள்ளிகள்
தாமதமாக திறக்கப்பட்டன. வேலை
நாள்கள் பற்றாக்குறையாக இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்
செயல்பட்டன. இந்தநிலையில் வரும்
கல்வியாண்டில் (2022-2023) சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க
வேண்டும் என பல்வேறு
ஆசிரியா்கள் அமைப்புகள், பெற்றோர்
கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்தநிலையில் வரும் கல்வியாண்டில் அனைத்து
சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என
பள்ளிக் கல்வித் துறை
அமைச்சா் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி தெரிவித்தார்.