TAMIL MIXER
EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்
கல்வி உதவித்தொகை உயர்வு – விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தைச்
சேர்ந்த
அலுவலர்
தகுதிக்கு
கீழ்
உள்ள
முன்னாள்
படைவீரர்கள்
சார்ந்தோர்களுக்கு,
கவர்னர்
தலைமையில்
கடந்த
செப்டம்பர்
23ம்
தேதி
தொகுப்பு
நிதியின்
மாநில
மேலாண்மைக்குழுக்
கூட்டம்
நடந்தது.
அதில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் படைவீரர்களின்
சிறார்களுக்கு
தற்போது
வழங்கப்பட்டு
வரும்
முன்னாள்
படைவீரர்
சிறார்
கல்வி
மேம்பாட்டு
நிதியுதவியை
2022-2023ம்
கல்வியாண்டு
முதல்
உயர்த்தி
வழங்கிட
முடிவு
செய்து
ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
1ம்
முதல்
5ம்
வகுப்பு
வரை
பயில்பவர்களுக்கு
500 ரூபாயிலிருந்து
2000 ரூபாயாவும்,
6 முதல்
8ம்
வகுப்பு
வரை
800 லிருந்து
4,000, ஒன்பது
மற்றும்
10ம்
வகுப்பு
பயில்பவர்களுக்கு
1,000 ரூபாயிலிருந்து
5000 ரூபாயாகவும்,
11 மற்றும்
12ம்
வகுப்பு
பயில்பவர்களுக்கு
1,500லிருந்து
6000 ரூபாயாகவும்
கல்வி
உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள்
வாய்ப்பினை
பயன்படுத்தி
விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரம் அறிய மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை
நேரில்
தொடர்புகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


