HomeNewslatest newsரூ. 7,500 உதவித்தொகை - ஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

ரூ. 7,500 உதவித்தொகை – ஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

என்னதான் லட்சங்களில் சம்பளம் கொடுத்தாலும் தனியார் வேலைகளை விட மக்கள் அரசு வேலைகளை தேடியே செல்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் பள்ளிப் பருவத்தில் போது ‘நீ என்ன ஆகவேண்டும்?’ என்று கேட்டால் ஐஏஎஸ் ஆவேன் என்று சொல்வதை அதிகம் கேட்க முடியும்.

அப்படி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதுகின்றனர். 27 பிரிவுகளின் கீழ் உள்ள ஆயிரம் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறையின் கீழ் ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி ஆண்டுதோறும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை, அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.

உதவித்தொகை

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு படிப்பதற்காக தேவையான உதவிகளையும் மாதம் தோறும் 7,500 உதவித்தொகையை 10 மாதங்களுக்கு நான் முதல்வன் திட்டம் வழங்கும்.
தேர்வு

தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களில் ஆயிரம் பேரை மட்டும் தேர்ந்தெடுப்பதற்காக நான் முதல்வன் திட்டத்திற்கு தனி தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் உதவி தொகை வழங்கப்படும்.
அறிவிப்பு

2025ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுத் போகும் தேர்வர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 7,500 உதவித்தொகை பெற விரும்பினால் ஆகஸ்ட் 2 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் அதில் தேர்ச்சி பெரும் நபர்களுக்கு இலவச பயிற்சியும் உதவி தொகையும் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னதாக உங்களது புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்

விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் :ஆகஸ்ட் 2, 2024
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 17,2024
தேர்வுக்கான அனுமதிச்சீட்டு தரவிறக்கம் செய்ய தொடங்கும் நாள் : செப்டம்பர் 9, 2024
தேர்வு நாள் : செப்டம்பர் 15 காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -