தமிழக ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.4000
நிவாரணம் – அரசு வட்டாரங்கள் தகவல்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் கடந்த ஆண்டை
போல இல்லாமல் இந்த
ஆண்டு மிகவும் வேகமாக
பரவி வருகிறது. கடந்த
24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
21 ஆயிரத்திற்கு அதிகமாக
உள்ளது. இதனால் இன்று
முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதே நிலைமை தொடர்ந்தால் கடந்த ஆண்டை போல
இல்லாமல் இந்த ஆண்டும்
முழு ஊரடங்கு அறிவிக்க
வாய்ப்புள்ளது. கடந்த
ஆண்டு ஊரடங்கு காரணமாக
பல மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால்
அரசு தரப்பில் ரூ.1000
நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த
ஆண்டும் 3 வாரங்களுக்கு முழு
ஊரடங்கு அறிவிக்க தமிழக
அரசு திட்டமிட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால்
CORONA நிவாரண தொகையாக
ரூ.4000 அனைத்து குடும்பங்களுக்கும் முன் கூட்டியே
வழங்க திட்டம் உள்ளதாக
அரசியல்வாதிகள் மற்றும்
அரசு வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.
பொருளாதாரம் காரணமாக மட்டும் தான்
மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே
பொருளாதாரத்தை சரி
செய்து மதுபான கடைகளை
மூடுவதே அரசின் நோக்கமாக
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பதவி ஏற்க உள்ள
புதிய முதல்வர் முக
ஸ்டாலின் பதவி ஏற்பிற்கு
பின்னர் ஊரடங்கு குறித்தும், நிவாரண தொகை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


