தமிழக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000
நிவாரணம்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. இதனை தடுக்க
மாநில அரசு பல
புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கூட்டம் அதிகம்
கூடாமல் இருக்க திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால்
பல நாட்டுப்புற கலைஞர்கள்,
ராட்டினம் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த
ஆண்டும் திருவிழாக்கள் நடத்தப்படாததால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண
நிதி வழங்கப்பட்டது. இந்த
ஆண்டும் திருவிழாக்கள் நடத்த
அனுமதி வழங்கப்படாததால் தற்போது
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000
நிவாரண நிதி வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக
நலவாரியத்தில் பதிவு
செய்த 6,810 கலைஞர்களுக்கு தலா
ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு
அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த
ஆண்டு CORONA காரணமாக
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் பொருளாதார
ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது அரசு
தரப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


